திருப்பூர், அக். 12 - இடுவாய் ஊராட்சியில் மரம் நடும் விழா ஞாயி றன்று நடைபெற்றது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் பாரதிபுரம் மற்றும் வள்ளு வர் நகர் பகுதியில் வெற்றிப் பாதை வார இதழ் சார்பாக மறைந்த முன்னாள் குடிய ரசு தலைவர் அப்துல்கலாம் நினைவாக மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலை வர் க.கணேசன் முன்னிலை யில், வரதராஜ பெருமாள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ். பரமசிவம், வெற்றிப்பாதை பத்திரிகை நிர்வாகிகள், ஊழியர்கள், ஊராட்சி பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.