மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் திக ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூன் 16- மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில உரிமைக்கும்,சமூகநீதிக்கும் எதிராக இந்தி-சமஸ்கிருதம்-”நீட்” நுழைவுத் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, இளை ஞரணி அமைப்பாளர் பூ.குருவிசயகாந்த் ஆகியோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாநகர திக இளைஞரணி தலைவர் மனோ நன்றி கூறினார்.
தாராபுரம்
இதேபோல் தாராபுரத்தில் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாரா புரம் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். தாராபுரம் நகர திமுக செயலாளர் தனசேகர், அண்ணா வேலு (மதிமுக),முருகானந்தம் (விசிக), பொன். செல்வம் (ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சின்ன வெங்காயம் நடவு அதிகரிப்பு
தாராபுரம், ஜூன் 16 – தாராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் பழைய, புதிய அமராவதி பாசன பகுதிகளில் நெல் அறுவடை முடிவடைந்தது. இதன்பின் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை நடவு செய்துள்ளனர். மேலும் கிணற்று பாசனம் உள்ள விவசாயிகளும் சின்ன வெங் காயம் நடவு செய்துள்ளனர். சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் வீரிய ஒட்டு ரகங்களை நட்டு வருகின்றனர். இதற்கு 60 நாட்கள் முறையான இடு பொருட்கள் இட்டு பராமரிக்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் அதிகளவு மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.