திருப்பூர் சேடர்பாளையத்தில் டெங்கு பாதிப்பு வாலிபர் சங்க கோரிக்கை ஏற்று தூய்மை பணி
திருப்பூர், டிச. 19 – திருப்பூர் மாநகராட்சி 18ஆவது வார்டு சேடர்பாளையம் பகுதியில் பலர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின் றனர். குறிப்பாக, இப்பகுதியைச் சேர்ந்த கவி வர்ஷினி என்ற 3 வயது குழந்தைக்கு தொடர் காய்ச்சல் இருந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ள னர் என்று குடும்பத்தார் தெரிவித்தனர். இப்பகுதியில் முறையான சாக்கடை வசதி, குப்பை அகற்றும் பணி நடை பெறாத நிலையில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கவி வர்ஷினி மட்டுமின்றி, மேலும் பல குழந்தைகள், பெரிய வர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனை யில் அனுமதிக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன் றியத் துணைச் செயலாளர் பி.பிரதாப் தலைமையில் வாலி பர் சங்கத்தினர் மக்களிடம கையெழுத்துகளைப் பெற்ற னர். பிச்சம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி இரண்டா வது மண்டல அலுவகத்தில் உதவி ஆணையரிடம் இம் மனுவை அளித்து சேடர்பாளையத்தில் சுகாதாரப் பணி மேற்கொள்ள வலியுறுத்தினர். இதில் வாலிபர் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் சதீஸ்குமார், முன்னாள் தலைவர் பாண்டியன் மற்றும் சேடர்பாளையம் வாலிபர் சங்கத்தினர், பொது மக்கள் பங்கேற்றனர். அதிகாரிகள் அப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், சேடர்பாளையத்தில் சாக்கடை மற்றும் குப்பை அகற்றும் பணி விரைந்து தொடங்கப்பட்டது.
கல்லூரி மாணவிக்கு தொல்லை: இளைஞர் கைது
அவிநாசி, டிச. 19- அவிநாசி அருகே கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப் பட்டார். அவிநாசி சாலையப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை தன்னுடன் பேசுமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அம்மாணவி அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் கைது செய்யப் பட்டுள்ளார்.
கல்லூரி பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்
அவிநாசி, டிச. 19 அவிநாசியில் தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். விஜயமங்கலத்தில் இருந்து அவிநாசி நோக்கி கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து எதிரே அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அவிநாசி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(54) பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அவிநாசி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.