tamilnadu

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜன.23- திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளியன்று (ஜனவரி 24) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடை பெறும் இந்த முகாமில் தனியார் துறை வேலையளிப்பவா்கள் கலந்து கொண்டு பயனாளிகளைத் தோ்வு செய்ய உள்ளனா். எனவே, வேலைதேடும் நபா்கள் தங் களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ள மோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி  பெற்றவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.  இந்த முகாமுக்கு வரும்போது தங்களது வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் கண்டறி யப்பட்டால் அதனையும் சரிசெய்து கொள்ள லாம். தகுதி இருப்பின் வேலைவாய்ப்பற் றோர் கல்வி உதவித் தொகை பெறவும்  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;