காங்கேயம், ஜூன் 2-காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் திங்களன்று (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.அதன்படி ஓலப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட ஓலப்பாளையம், பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு. பழையகோட்டை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளான பழையகோட்டை,நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளான காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.