அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் அரசு நிர்ணயித்த விலைக்கே நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு
அவிநாசி, ஜூன் 29- அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்திற்காக, சந்தை விலைக்கு மாறாக அரசு நிர்ணயித்த விலைக்கே 2.17 ஏக்கர் நிலங்களை ஒப்படைத்த விவசாயிகளுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு கடந்த பிப்.28ஆம் தேதி அடிக்கல் நாட்டப் பட்டது. தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத்திற்கு உள்பட்ட எம்மாபூண்டி வரப்பாளையம் கிராமத்தில் ஒரு நீரேற்ற நிலையமும் அமையவுள்ளது. இந்த நீரேற்ற நிலையம் அமைப்பதற்கு தேவையான 2.17 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த பெ.நடராஜ், க.குழந்தை சாமி, க.பழனிசாமி, க.லோகநாதன், கு.பழனிசாமி, வே. பழனியப்பகவுன்டர், க.முத்துகுமார் உள்ளிட்ட விவ சாயிகள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே வழங்கி யுள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு அவிநாசி பகுதியைச் சேர்ந்த போராட்டக்குழுவினர், சமூக ஆர்வலர்கள், களஞ் சியம் விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரி வித்துள்ளனர்.
மாநகராட்சி பள்ளிக்கு துரோணா பெயர் எதிர்ப்பைத் தொடர்ந்து நீக்கப்பட்டது
திருப்பூர், ஜூன் 29 – திருப்பூர் ராயபுரம் மாநகராட்சி பள்ளிக்கு துரோணா பாடசாலை என பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பெயரை கல்வித்துறை அலுவலர்கள் நீக்கி உத்தர விட்டனர். திருப்பூர் மாநகராட்சி 46ஆவது வார்டு ராயபுரத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, ராயபுரம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் 246 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு ’ரோட்டரி திருப்பூர் பிரைம்’ அமைப்பின் சார்பில் ரூ.75 லட்சம் நிதி யுதவி அளிக்கப்பட்டது. இதில் புதிய கட்டுமானங்கள் கட்டப்பட்டு கடந்த 21ஆம் தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக கால் நடைத்துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இப்பள்ளிக்கு துரோணா பாடசாலை என திடீரென பெயர் சூட்டப்பட்டது. நிதி யுதவி அளித்தவர்கள் இப்பெயர் சூட்டிய தாகக் கூறப்பட்டது. இதற்கு பெற்றோர், பொது மக்கள், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமுஎகச உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடமும் இப்பெயரை நீக்க வலியு றுத்தி மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று இப் பள்ளியின் முகப்பு நுழைவாயில் பெயர்ப் பலகையில் இருந்து துரோணா பாடசாலை என்ற பெயர் நீக்கப்பட்டது. எனினும் பள்ளி கல்வெட்டில் துரோணா பாடசாலை என பொறிக்கப்பட்டுள்ளதையும் நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வற்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தா கூறுகையில், கடந்த காலங்களில் பள்ளிக்கு நிலம் மற்றும் நன்கொடை வழங்கியவர் களின் பெயர்கள் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது அதுபோன்ற அர சாணை எதுவும் இல்லை. இந்நிலையில் அந்த பெயரை அகற்றிவிட்டு, ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியாக மாற்றிவிட்டோம் என்று தெரிவித்தார்.