tamilnadu

img

திருப்பூர்: விபத்தில் சிக்க வைக்கும் மங்கலம் சாலை செப்பனிடுவது எப்போது? பொதுமக்கள் கேள்வி

திருப்பூர், செப். 7- திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மங்கலம் சாலையில் குடிநீர் திட்டப்  பணிகளுக்காகத் தோண்டி மூடப் பட்ட பகுதி குண்டும், குழியுமாக, வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் ஆபத்தான நிலையில் உள் ளது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட்டு புதுப்பிக் காமல் இருப்பது இப்பகுதி மக்களுக் குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் பல் வேறு பகுதிகளிலும் நான்காவது குடிநீர்த் திட்டத்திற்காக பிரதான குடிநீரேற்றுக் குழாய் மற்றும் விநி யோகக் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மங்கலம் சாலையில் ஆண்டிபாளை யம் பிரிவு, தாண்டி கோழிப் பண்ணை, குள்ளேகவுண்டன் புதூர், குளத்துப்புதூர் மற்றும் சின் னாண்டிபாளையம் பிரிவு உள் ளிட்ட பகுதிகளில் குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மங் கலம் சாலையில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் நிறைவேற்றப்பட் டுள்ளன.

குழாய் பதிக்கப்பட்ட பிறகு அப்பகுதி மூடப்பட்டுவிட்டது. எனி னும் திருப்பூர் மாநகராட்சி எல்லை முடிந்து இடுவாய் மற்றும் மங்க லம் ஊராட்சிகள் தொடங்கும் பகுதி வரை தார்ச்சாலைகள் சிதைக்கப் பட்டு குண்டும், குழியுமாக உள்ளன.  திருப்பூர் நகரில் உள்ள எட்டு பிர தான நெடுஞ்சாலைகளில் மங்கலம் சாலையும் ஒன்று. இந்த சாலையின் வழியாக பல்லடம் - அவிநாசி நெடுஞ்சாலை மற்றும் சோமனூர் பகுதிக்குச் செல்ல முடியும்.

இதன் மேற்குப் பகுதி முழுவதும் விசைத் தறித் தொழில்களும், கல் குவாரிக ளும் பெருமளவு உள்ளன. எனவே, இந்த சாலையில் லாரி மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து கணிசமாக உள்ளது. இதுதவிர நகரம் விரிவ டைந்திருப்பதன் காரணமாக தொழில் தேவைகளுக்கும், வேலைக்குச் செல்வதற்கும் ஆயிரக் கணக்கானோர் இருசக்கர வாகனங் களில் வந்து செல்லும் நிலையும் உள்ளது. இத்தகைய போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் குடிநீர்த் திட்டப் பணியை முடித்த பிறகும் சாலையைச் செப்பனிடாமல் மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு வைத் திருக்கின்றனர்.

சாலை நெடுகிலும் ஒரு பகுதி தார்ச்சாலையும், மறு பகுதி குண்டும், குழியுமான மண் மேடாகவும் இருப்பதால் இருபுற மும் வந்து செல்லும் வாகனங்கள் நெரிசலான நிலையில் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. எனவே இச்சாலையை மாநக ராட்சி நிர்வாகம், உடனடியாக செப் பனிட்டுத் தார்ச்சாலையை அமைக்க வேண்டும் என்று அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.