tamilnadu

img

திருப்பூர்: மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், செப். 7 – திருப்பூர் மாநகரம் பெரிச்சிபாளையம் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். ஞாயிறன்று கடுமையான மழைக்கு இடையிலும் மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம் பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் பகுதித் தலைவராக  லோகநாதன்,  செயலாளராக சண்முகம்,  பொரு ளாளராக செந்தில்குமார்,  துணைத்தலைவராக சேதுராமன், துணைச் செயலாளராக மூர்த்தி, மற்றும்  நிர்வாக குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் திருப்பூர் மாவட்ட தலைவர் டி.ஜெயபால், தெற்கு மாநகரச் செயலாளர் ரமேஷ் ஆகி யோர் உரையாற்றினர். இதில், கரட்டாங்காடு கிளைப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

;