tamilnadu

img

திருப்பூர்: வாலிபர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்

திருப்பூர், செப். 23- திருப்பூர் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்தக் கோரியும், மின்தடையால் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் வாலிபர் சங்கத்தி னர்  காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில்  மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத் தில் செயற்கை சுவாசம் மூலம் ஆக்சிஜன் கிடைக்காமல்  கௌரவன், யசோதா என்ற இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண் டும். உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், வாலி பர் சங்க நிர்வாகிகளிடம்  பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார்.

இதில், அனைத்து கோரிக் கைகளும் நிறைவேற்றப்படும் என கோட் டாட்சியர் தெரிவித்ததையடுத்து, வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப் போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் செ.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் ப.ஞானசேகர், அருள், அனிபா, பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.