tamilnadu

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே திருட்டு; வைரலாகப் பரவும் வீடியோ

அவிநாசி, ஜன. 8- அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு பின்புறம் உள்ள வீட்டில் மர்ம நபர் புகுந்து உள்ளிருந்த துணிகளைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சி வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவிநாசி – கோவை பிரதான சாலையில் நாயக்கன் தோட்டம் அருகில் அவிநாசி காவல் துணைக் கண்கா ணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இதன் பின்புறம் அவி நாசியப்பன் மகன் சுந்தரம்(44) என்பவரது வீடு உள்ளது. அவர் அவிநாசி கைகாட்டிப்புதூரில் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று இரவு, இவரது வீட்டின் பின்புற சுற்றுச்சுவர் மீது ஒரு மர்ம நபர் ஏறி வந்துள்ளார். பிறகு வீட்டிற்குள் உள்ள ஆட்கள் சத்தம் கேட்ட  அந்நபர்,  மெதுவாக அங்கு உலர வைத்துள்ள துணியை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே குதித்து விட்டுள்ளார்.  இந்த விடியோ பதிவு அவிநாசியில் வைரலாக பரவி வருகிறது. அந்நபர், வீட்டில் யாரும் இல்லை என நினைத்து, திருட வந்தாரா?, எதற்காக  உலர வைத்துள்ள துணியை மட்டும் எடுத்துச் சென்றார்? என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வீட்டில் கண்காணிப்பு கேமிரா  பொருத்தப்பட்டு இருந்ததால், மர்ம நபர் துணியை எடுத்து செல்வது உள்ளிட்ட காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது. இது குறித்து அவிநாசி காவல் துறையினர் விசா ரித்து வருகின்றனர்.

;