tamilnadu

அரசுப் பேருந்தில் ரூ.10 நாணயங்களை பெறக்கூடாது என சுற்றறிக்கை பொது மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கியது போக்குவரத்து நிர்வாகம்

 திருப்பூர், ஜூன் 23 – அரசுப் பேருந்தில் பயணிகள் ரூ.10 நாண யத்தைக் கொடுத்தால் பெற வேண்டாம் என திருப்பூர் மண்டலம் அரசுப் பேருந்து பணி மனை கிளை 2ல் சுற்றறிக்கை ஒட்டப் பட்டது. இந்த விபரம் சமூக வலைத்தளங் களில் பரவி பொது மக்கள் எதிர்ப்புக்கு ஆட் பட்டதும் சுற்றறிக்கையை கிளை மேலாளர் திரும்பப் பெற்றார்.  திருப்பூர் மண்டலத்தில் போக்குவரத்து பணிமனை இரண்டில் கடந்த 21ஆம் தேதி ரூ.10 நாணயங்கள் குறித்து சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. இதில் நடத்துனர்கள் பயணிகள் தரும் பத்து ரூபாய் நாண யங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், தவறும்பட்சத்தில் வழித் தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும், வசூல்  தொகையை ஒப்படைக்கும்போது ரூ.10  நாணயத்தை தவிர்க்குமாறும் கூறப்பட் டிருந்தது. இந்த சுற்றறிக்கை விபரம் சமூக வலைத் தளங்களில் பரவியது. ரிசர்வ் வங்கி  வெளியிட்ட நாணயத்தை மக்களிடம்  பெறக்கூடாது என்று அரசுப் போக்குவரத்து  நிர்வாகமே உத்தரவிட்டிருப்பது கண்டிக் கத்தக்கது என எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உடனடியாக அந்த சுற்றறிக்கை நீக்கப்பட்டதாக கிளை மேலாளர் தனபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடை யூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் அது பொது மக்களிடம் தவறான கருத்தை பதிவு  செய்து அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அதனை திரும்பப் பெறப் பட்டதாகவும் கூறினார். இது குறித்து சிஐடியு தரப்பில் விசாரித்த போது, நடத்துநர்கள் கொண்டு வந்து கொடுக்கும் வசூல் தொகையில் ரூ.10  நாணயங்களை வங்கிகளே வாங்க மறுக் கின்றனர். பத்து ரூபாய் பணத்தாள் களையும் கூட மொத்தமாக கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். இது தொழி லாளர்களுக்கும், போக்குவரத்து நிர்வா கத்துக்கும் தேவையில்லாத சிரமத்தை ஏற்படுத்துகிறது. வங்கி நிர்வாகங்கள் ரூ.10 நாணயத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேசமயம் வங்கிகளின் நடைமுறை காரணமாக மக்களிடம் ரூ.10 நாணயத்தை பெற வேண்டாம் என்ற அதிகாரிகளின் சுற்றறிக்கையும் சரியல்ல. கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.