tamilnadu

img

திருப்பூரில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம்

திருப்பூர், ஜூன் 16– திருப்பூர் ஒருங்கிணைந்த நீதி மன்றக் கட்டிடம் நீர்நிலையாக பயன்பட்டுவந்த இடத்தில் கட்டப் பட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கவலை ஏற் படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டப் பெருந் திட்ட வளாகம் பல்லடம் சாலை  எல்ஆர்ஜி மகளிர் அரசுக் கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இந்த  வளாகத்தில் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை தற்போது செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கமும் தற்போது கட்டப்பட்டு வரு கிறது. திருப்பூர் மாவட்டம் உருவாக் கப்பட்டு மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பெருந் திட்ட வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்தபோது, அலகுமலை, ஈட்டிவீரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆய்வு செய் யப்பட்டன. எனினும் மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ள இட மாக, நகரின் மையப் பகுதியில் பல்லடம் சாலையில் எல்ஆர்ஜி கல்லூரிக்கு அருகில் உள்ள இடம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை தேர்வு செய்தபோதே, பெருந்திட்ட வளாகம் அமையும் இடம் நீர்நிலையாக உள்ளது. இங்கு வளாகம் அமைத்தால் நீர் நிலை அழிக்கப்படுவதுடன், இங்கு அமைக்கப்படும் கட்டிடங்களும் உறுதித்தன்மை இன்றி பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஆட்சேபம் எழுந்தது. ஆனால் அப்போது இதை அரசு நிர்வாகம் மறுத்தது. குறிப்பாக இந்த இடம் நீர்நிலைப் புறம்போக்கு கிடையாது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. எனவே  இங்கு ஒருங்கிணைந்த மாவட்டப்  பெருந்திட்ட வளாகம் அமைப்ப தால் எந்த பிரச்சனையும் வராது என்று அதிகாரிகள் கூறினர். அப்போதைய தமிழக முதல்வர்  ஜெயலலிதா இந்த வளாகம் அமைக்க நிலங்களை பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்  துறைக்கு ரூபாய் 51 கோடியே 25 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்தார். அத்துடன் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக ரூ.103 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியரகமும், மாவட்ட காவல் அலுவலகமும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வரு கின்றன. எனினும் இந்த பகுதி மழைக் காலங்கள் மட்டுமின்றி ஓடைகளில் இருந்து நீர் வந்து சேரும் தாழ்வான பகுதியாகவும் அமைந்திருப்பதால் பெருமளவு தண்ணீர் தேங்கி இருக்கும். எனவே  புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட போது பெருமளவு மண்ணைக் கொட்டி மேடுபடுத்தி புதிய கட்டி டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்  தொடர்ச்சியாக தற்போது நீதி மன்ற வளாகமும் கட்டப்பட்டு வரு கிறது.  நீர்நிலை கிடையாது என்று அரசு என்னதான் ஆவணங்களை சான்றாகக் காட்டி சாதித்தாலும், உண்மையை மறைக்க முடியாது.  சமீபத்தில் பெய்த மழையில் நீதி மன்றக் கட்டிடம் கட்டப்படும் இடத் தைச் சுற்றிலும் மிகப்பெருமளவு தண்ணீர் தேங்கி அது நீர்நிலைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.  இந்த கட்டிடப்பணி முடிந்த வுடன் சுற்றிலும் உள்ள பள்ளமான பகுதிகளையும் மண்ணைக் கொட்டி நிரப்பப் போவதாக பொதுப்பணித் துறை வட்டாரத்தினர் கூறினர். ஆக திருப்பூரில் அரசு நிர்வாகத்தை நடத்துவதற்காக ஒரு நீர்நிலையை மொத்தமாக அழிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் இதற்கு அருகிலேயே பூம்புகார் என்ற குடியிருப்புப் பகுதி இருந்தது. அந்த இடம் புறம்போக்கு இடமாக இருந்த நிலையில் நீர் நிலைப் புறம்போக்கில் ஆக்கி ரமிப்பு செய்து வசிப்பதை அனு மதிக்க முடியாது என்று அவர்களை மொத்தமாக வெளியேற்றி விட் டனர். அங்கு வசித்தவர்களுக்கு நகருக்கு வெகு தொலைவில் அறி வொளி நகரில் அடுக்குமாடி வீடு  கட்டிக் கொடுத்து அனுப்பி விட்ட னர். சாமானிய மக்கள் வசித்தால் அது  நீர்நிலை, எனவே அந்த நிலத்தைப்  பாதுகாக்க வேண்டும் என வெளி யேற்றும் அரசு நிர்வாகம், தனது  நிர்வாக பரிபாலன நடவடிக்கை களுக்காக அப்பட்டமாக நீர் நிலையை ஆக்கிரமிப்பதைப் பற்றி  கொஞ்சமும் அலட்டிக் கொள்ள வில்லை. மக்கள் வசதிக்காகத்தான் நகரின் மையப் பகுதியில் மாவட்ட  ஒருங்கிணைந்த வளாகம் அமைக் கப்படுகிறது என்று சொன்னால், மாறி வரும் காலச்சூழலில் இயற் கையை, நீர்நிலைகளைப் பாது காத்துக் கொண்டே புதிய கட்டி டங்களைக் கட்டுவதற்கு பல  வழிமுறைகள் உள்ளன. இது போன்ற நீர்நிலைகளில் நீர்வழிப் பாதையையும், அவை தேங்கும் குளம், குட்டைகளையும் சேதப் படுத்தாமல் அங்கேயே காங்கிரீட் தூண்கள் அமைத்து, அதில் உயர மான மேடை போல் தளம் அமைத்து  அதன் மேல் பல தளங்கள் கொண்ட  கட்டிடங்கள் கட்ட முடியும். அதன்  மூலம் நீர்நிலையும் பாதுகாக்கப் படும். புதிய கட்டிடமும் உருவாக்க முடியும் என்று பொறியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதைச் செய்வதற்கு சற்று கூடுதல் நிதி தேவைப்படும். அரசு மனம் வைத்தால் இது ஒன்றும் பெரிய செலவு கிடையாது. ஏற்கெ னவே நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் ஏரி, குளங்கள் இருந்தன. அவை இந்த எழுபதாண்டு காலத் தில் சரி பாதிக்கும் கீழே 40 ஆயிரம் என்ற அளவில் குறைந்துவிட்டது.  உலகம் முழுவதும் புவி வெப்ப மயமாதால், இயற்கை காடு அழிப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் தண்ணீருக்கான நெருக்கடி முற்றி வருகிறது. இந்நிலையில் இருக்கும் நீர் நிலைகளைப் பாது காப்பது தலையாய கடமையாகும். எனவே திருப்பூர் பெருந்திட்ட வளாகத்தில் நீதிமன்ற வளாகம் கட்டினாலும், அதைச் சுற்றிலும் இருக்கும் நீர்நிலைகளை அழித்து விடாமல், அதைப் பாதுகாப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை இப்போது கூடச் செய்யலாம். மாவட்ட நிர் வாகமும், தமிழக அரசும் இதை அக் கறையோடு செய்ய வேண்டும் என  இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  எதிர்பார்க்கின்றனர்.             -வே.தூயவன்