tamilnadu

img

தினசரி சந்தையை இடிக்கும் பணி வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

திருப்பூர், மார்ச் 19 - திருப்பூரில் மிடுக்கான நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் தினசரி சந்தையை இடிக்கும் பணியைத் தொடங்க வந்த மாநக ராட்சி ஊழியர்களுக்கு அங்கிருந்த வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து பணியைத் தொடங்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகரில் தற்போதுள்ள பூ மார்க்கெட், தினசரி சந்தை, மீன் மார்க்கெட், தென்னம்பாளை யம் சந்தை ஆகியவற்றை இடித் துவிட்டு நவீன வசதிகளுடன் வணிக வளாகங்களாக மாற்று வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பூ மார்க்கெட், தென்னம் பாளையம் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடங்கப் பட்டுவிட்டது. அதேசமயம் தின சரி சந்தையை இடித்து விட்டு நவீன வணிக வளாகம் அமைக் கும் பணிக்கு அங்குள்ள வியாபாரி கள் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். குறிப்பாக அங்கிருக் கும் சுமார் 500 வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுப்பதுடன், புதிதாக உருவாக்கும் வணிக வளாகத்திலும் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தினசரி சந்தையில் வியாபாரிகளை அப்புறப்படுத் திவிட்டு கடைகளை இடிக்கும் பணியைத் தொடங்குவது தாம தம் ஆகி வருகிறது. ஏற்கெனவே வியாபாரிகளுக்கு உரிய இடம் பல்லடம் சாலை பழைய ஆட்சி யரக வளாகத்தில் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், புதன்கிழமை (மார்ச் 18) தினசரி சந்தையை இடிக்கும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் வியாழனன்று காலை தினசரி சந்தையை இடிக் கும் பணியைத் தொடங்க மாநக ராட்சி அதிகாரிகள் உரிய பணி யாளர்களுடன் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு இருந்த வியாபாரிகள் சந்தைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். காவல் துறை பாதுகாப் புடன் வியாபாரிகளை அப்புறப் படுத்திவிட்டு வேலையைத் தொடங்க மாநகராட்சி அதி காரிகள் தயாராக இருந்தனர். எனினும் வியாபாரிகளுக்கு ஆதர வாக திமுக மாவட்டச் செயலா ளர் க.செல்வராஜ் உள்பட பலர் அங்கு வந்தனர். அவர்கள் காவல் துறை மற்றும் மாநகராட்சி அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மாநகராட்சி தரப்பில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், 60 கடைகள் மட்டுமே மாற்று இடத்தில் உள்ளன. ஆனால் 500 வியாபாரிகள் எப்படி அங்கே தங்கள் வியாபாரத்தை நடத்த முடியும். எனவே அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு இந்த பணியைத் தொடங் கலாம் என்று வியாபாரிகள் தரப் பில் வலியுறுத்தப்பட்டது. வியா பாரிகள் உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் இப்பணியை தற் காலிகமாக கைவிட்டுவிட்டு அங் கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.