அவிநாசி, செப். 7- கருவலூரில்அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி முன்பு உள்ள சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்கும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உடனடியாக பள்ளி முன்பு வேகத் தடை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.