அவிநாசி, ஆக.21- அவிநாசி அருகே பொங்கலூரில் உள்ள குளத்தை தனியார் ஆக்கிரமிப்பு தொடர் பான பிரச்சனையில் ஆட்சியர், ஆக்கிர மிப்பாளர்கள் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட் டுள்ளது. அவிநாசி ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சியில் உள்ள குளம் ஆதிதிராவிடர் காலனிக்கு நீராதாரமாக விளங்குகிறது. மேலும் 4க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் பயனளிக்கிறது. இக்குளத்தின் அருகில் உள்ள குடிநீர் கிணறு, ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்புத் தொட்டி, மழைநீர் சேகரிப்பு குட்டை, உரக்குழி ஆகியவை இருந்தன. இந்நிலையில் இக்குளத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தனி நபர்கள் மண் நிரப்பி வழித்தடம் அமைப் பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, கட்டு மானப் பணிகளை தொடங்கினர். இதை யறிந்த பொதுமக்கள், குள ஆக்கிரமிப் பையும், கட்டுமான பணியையும் தடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித் தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் குளத்தில் மண் நிரப்பி ஆக்கிரமிப்பு செய் தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், நில அபகரிப்பு பதி வேட்டிலும் பதிவு செய்தது. இருப்பினும் தனி நபர்கள் அக்குளத்தில் தொடர்ந்து மண் நிரப்பினர். இதனால் பொதுமக்கள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதற் கிடையே, கடந்த ஜூன் மாதம் மீண்டும் குளத்தில் மண் நிரப்பி, கட்டுமானப் பணிகள் தொடங்குவதை அறிந்த பொது மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலக நில நிர்வாக அலுவ லரும், ஆய்வு செய்து உரிய பதிலளிக்க வேண்டும் என ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் இது வரை யிலும் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய் யப்படவில்லை. இந்நிலையில் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆக்கிர மிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் சம்பத்குமார், மூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.