tamilnadu

img

பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தவர் மருத்துவமனையில் அனுமதி

அவிநாசி, ஜூன் 15- அவிநாசி பழைய பேருந்து நிலையில் தங்கி யிருந்த உடல் நலிவடைந்த ஒருவரை பேரூராட்சி நிர்வா கத்தினர்  மருத்துவமனை யில் சேர்த்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இத னால் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று மாதத்திற்கும் மேலாக கோவையைச் சேர்ந்த குமார் (45) என்பவர் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் தங்கி உள்ளார்.இதையறிந்த அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் தினசரி உணவு அளித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மூன்று தினங்களாக இவரது உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இதனை அறிந்த அவிநாசி பகுதியைச் சேர்ந்த ஷரிப் என்பவர்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜ யகார்த்திகேயனுக்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பியுள் ளார்.   இதையடுத்து  திங்களன்று  அவிநாசி பேரூராட்சி நிர்வா கத்தினர், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் 108 அவசர ஊர்தி மூலமாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவருக்கு பரிசோதனை செய்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட் டார். மேலும், அவர் தங்கியிருந்த இடத்தை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.