tamilnadu

img

“உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர் தொட்டி!” திருப்பூர் எம்எல்ஏ நிதியில் கட்டிய தொட்டிக்கு நெட்டிசன்கள் பட்டம்

திருப்பூர், அக். 11 - திருப்பூர் தெற்குத் தொகுதி 50 ஆவது வார்டில் நான்கு தூண்களைக் கட்டி அதன் மேல் சின்டெக்ஸ் பிளாஸ் டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டி ருப்பதற்கு மதிப்பீடு ரூ.7.70 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மிஞ்சிப் போனால் ரூ.1 லட்சம் கூட செலவு பிடிக்காத இத்திட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் செல விடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப் பதைப் பார்த்து திருப்பூர் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கிண்ட லடித்து வருகின்றனர். திருப்பூர் தெற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்தத் தொட்டி அமைக்கப் பட்டு கடந்த 7ஆம் தேதி எம்எல்ஏ சு.குணசேகரன் திறந்து வைத்ததாக அந்த தொட்டியில் குறிப்பிடப்பட் டுள்ளது.ஆளும் கட்சியினர் வழக்க மாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட அரசின் திட் டங்களுக்கான செலவு மதிப்பீட்டில் சத விகித அடிப்படையில் கமிஷன் பெறும் ஊழல் நடைபெறுவது சகஜமாக உள் ளது.

ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கிய தொகையில் 10 முதல் 30 சதவிகிதம் வரை கமிஷன் பெறுவதுதான் இது வரை நடைபெற்று வந்தது, ஆனால் இப்போது ஊழல் தொகையைத் தீர்மா னித்து விட்டு அதில் ஒரு பகுதியில் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். அதற்கு சாட்சியாகத்தான் 50ஆவது வார்டு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடி நீர் தொட்டியுடன் நீரேற்றம் செய்வ தற்கான மோட்டார் பொருத்திய செல வையும் சேர்த்தால் கூட அதிகபட்சம் ரூ.2 லட்சத்தைத் தாண்டாது. ஆனால் மூன்று, நான்கு மடங்கு கூடுதல் தொகையை செலவிட்டதாக அந்த தொட்டியிலேயே பகிரங்கமாக எழுதி யும் வைத்திருக்கின்றனர். இதையே சான்றாக வைத்து இந்த தொட்டி அமைத்ததில் நடைபெற்றிருக்கும் ஊழலை அரசு நிர்வாகம் விசாரித்து குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கூறு கின்றனர். ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பேருந்து நிழற்குடை ஒன்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.

அதற் கான மதிப்பீடு ரூ.45 லட்சம் என குறிப் பிட்டுள்ளனர். ஏறத்தாழ அரைக்கோடி ரூபாய் செலவிட்டு ஒரு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டிருப்பது அநேகமாக தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இருக்காது. வழக்கமான பேருந்து நிழற்குடை போல் இல்லா மல் சற்றே பெரிய அளவில் சில பேருந் துகளை உள்ளே நிறுத்தக்கூடிய அள வுக்கு அந்த நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. எனினும் அதன் மதிப் பீட்டுத் தொகையும் மேலே சொன்ன குடிநீர் தொட்டி போல பல மடங்கு அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊழல்கள் குறித்து அரசு நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க் கின்றனர்.  

(ந.நி)