திருப்பூர், பிப். 27- திருப்பூரில் கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளை துன்புறுத்தும் கும்பல் மீது காவல்துறையினர் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கத் தின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திருப்பூரில் பேட்டியளித்த போது, தமிழகத் தில் வணிகத்துறை என்பது பல்வேறு கட்டங்களாக நசுக்கப்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு குப்பை வரி, தொழில் வரி என்று வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒவ் வொரு மாவட்டத்திற்கும் வரி விகிதம் வேறுபடுகிறது. உதாரணமாக ஒரு கடைக்கு ரூ.96 ஆயிரம் குப்பை வரியாக அதிகா ரிகளால் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது வரியை குறைத்து கொள்வதாக அதிகாரிகள் கூறு கிறார்கள். இந்த பிரச்னையை அமைச்சர்க ளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள் ளோம். குப்பை வரி இவ்வளவுதான் என் பதை அரசு முறையாக நிர்ணயம் செய்ய வில்லை. மேலும், திருப்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு போன பொருட்களை வியா பாரிகளுக்கு மீட்டு கொடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை துன்பு றுத்தும் கும்பல் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைய டைப்பு என்று சொன்னால் வணிகர் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.