அவிநாசி ஏப்.19 -
சேவூரில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக சபாநாயகரும், அவினாசி சட்டமன்ற உறுப்பினருமான ப.தனபால், மாற்று திறனாளிகளுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய் , காய்கறிகள் உள்பட உணவு பொருட்களை வழங்க முடிவு செய்தார்.
இதையடுத்து சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு சபாநாயகர் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அவினாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் டி.சாந்திலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், சேவூர் நில வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் பாரதி, ஊராட்சி செயலர் எம்.கண்ணன் மற்றும் கே.கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.