tamilnadu

img

சின்னவீரம்பட்டியில் 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் அடிக்கல்

உடுமலை, பிப். 15- உடுமலைப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நபார்டு திட்டத் தின் கீழ் 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு கட்டும் பணியினை கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.  திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சனி யன்று நடைபெற்ற வளர்ச்சித் திட் டப்பணிகள் தொடக்கவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி னார். உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொங்கல் நகரம் ஊராட்சி, கொங்கல் நகரில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொங் கல் நகரம் வடக்கு விநாயகர் கோவில் முதல் ராவாணாபுரம் கோழிக்குட்டை பி.ஏ.பி வாய்க்கால் வரையும், கொண்டம் பட்டி ஊராட்சியில் எஸ்.வல்லகுண்ட புரம் முதல் மசக்கவுண்டன்புதூர் வரையிலான (2.650 கி.மீ) சாலை மேம்பாடு செய்யும் பணி, ஆத்துக்கி கிணத்துப்பட்டியில் தூங்காவி சாலை முதல் பூளவாடி சாலை வரையிலான சாலை மேம்பாடு பணியினையும், குடி மங்கலம் ஊராட்சியில் பொள்ளாச்சி - தாராபுரம் சாலை தெற்கு பேருந்து நிறுத்தம் முதல் ஊராட்சி எல்லை வரையிலான சாலை மேம்பாட்டுப் பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மத்திய நிதிக்குழு மானிய திட் டம் 2019-2020 ன் கீழ் சோமவாரப் பட்டி முதல் அம்மா பட்டி வரையிலான சாலை பலப்படுத்தும் பணியினையும், லிங்கம நாயக்கன் புதூரில் பெதப்பம் பட்டி - செஞ்சேரிசாலை முதல் பெதப் பம்பட்டி எல்லப்பநாயக்கன் புதூர் வரையிலான சாலை மேம்பாடு செய் யும் பணியினையும் மற்றும் ஒப்படைக் கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் ஊராட்சி பகுதிகளில் ரூ.358.60 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகி ருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  இதனைத்தொடர்ந்து,  சின்னவீரம் பட்டியில் உடுமலைப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.73 லட் சம் மதிப்பீட்டில், 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி யினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.  முன்னதாக, கால்நடை பராமரிப் புத்துறையின் சார்பில் போடிப்பட்டி மற்றும் ஜல்லிப்பட்டி ஆகிய பகுதி யைச் சார்ந்த 410 கிராமப்புற பெண்க ளுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம், தலா ரூ.2075- மதிப்பில் ரூ.8,50,750- மதிப்பிலான விலை யில்லா நாட்டுக்கோழிகளை அமைச் சர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், செயற்பொறியாளர் சேகர், உடுமலைப் பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், உள்ளாட்சி அமைப்பு பிர திநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.