அவிநாசி, செப்.18- ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் நலிந்துவிட்டன என்ற கருத்து ஏற்புடை யதல்ல என வருமானவரித்துறை அலு வலர் கூறியுள்ளார். வருமான வரி தாக்கல் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி அவிநாசி செந்துார் மஹாலில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருமான வரித்த்துறை கூடுதல் ஆணை யாளர்சுந்தரேசன் நிருபர்களிடம் கூறி யதாவது, திருப்பூர் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பான்கார்டு வைத்துள்ளனர். அவர்க ளில், 1.50 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்கின்றனர். ஆண்டுதோறும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 – 15 சதவிகிதம் அதிகரிக்கிறது. ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், துவக்கத்தில் சில தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான்; அதன் பயனை புரிந்துகொள்ளும் போது, தொழில் துறையினரும், வருமான வரி செலுத்து வோரும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர். அவிநாசியைப் பொருத்தவரை அறக் கட்டளை என்ற பெயரில், ஏராளமான திருமண மண்டபங்கள் செயல்படுகின் றன. அவர்களில் பெரும்பாலானோர் வரி செலுத்துவதில்லை. வணிக நோக்கில் செயல்படும் எந்தவொரு அமைப்பும் கட்டா யம் வரி செலுத்தவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். ஒருவரது சேமிப்புக் கணக்கில் திடீ ரென பெருமளவு தொகை வரவு வைக்கப் படும்போது, இயல்புநிலை தாண்டிய கணக்கு என்ற அடிப்படையில், வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும். முறைகேடாக வரவு வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும், ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் கள் நலிந்துவிட்டன என்ற கருத்து ஏற்பு டையதல்ல என்று தெரிவித்தார்.