திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் புதனன்று தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் நடைபெற்றது. பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்று மக்களிடம் கல்விக் கொள்கையின் பாதகங்களை எடுத்துக் கூறி கையெழுத்துப் பெற்றனர்.