திருப்பூர், ஜூலை 2 - 2017 -18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினி வழங்கக்கோரி பல்லடம் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவல கத்தை இந்திய மாணவர் சங்கத் தினர் செவ்வாயன்று முற்றுகை யிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக் கணினி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராள மான மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டமிட்ட படி வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த ஏராளமான மாணவர்களுக்கு இதுவரை இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களில் முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி வழங் கக்கோரி பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தை இந்திய மாணவர் சங்கத் தினர் முற்றுகையிட்டு இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க கோரி தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண் டனர். இதையடுத்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக நடப்பாண்டில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.அதன் பின்னர் முன்னாள் மாண வர்களுக்கு விரைவில் வழங்கப் படும் என அரசாணை வெளி யிட்டுள்ளது என்று தெரிவித் தனர். மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.