tamilnadu

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

திருப்பூர், பிப்.13 - திருப்பூரில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கலாதரன் (39). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப் பூர் வந்த கலாதரன் பூலுவப்பட்டி பகுதியில் தங்கி பின் னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் சில மாதங்களுக்கு முன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.  இந்நிலையில் கலாதரன் 17 வயது சிறுமி ஒருவருடன் பழகி இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்வ தாக கூறி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.சிறுமியின்  பெற்றோர் கலாதரன்மீது மகளைக் கடத்திச்சென்றதாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி புதனன்று கலாதரனை கண்டுபிடித்தனர். மேலும், அவர் கடத்திச் சென்ற சிறுமியை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலாதரன் சிறுமியை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்து கலாதரனை கைது செய்தனர்.