திருப்பூர், ஏப். 18 -திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் விற்பனை கடைகளை ஏழு இடங்களில் பிரித்து நடத்த மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்லடம் சாலை தென்னம்பாளையம் மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நஞ்சப்பா பள்ளி வளாகம், காட்டன் மார்க்கெட் வளாகம், பல்லடம் சாலை மார்க்கெட் எதிரில் உள்ள தனியார் இடம், எல்ஆர்ஜி மகளிர் கல்லூரி வளாகம் ஆகிய ஏழு இடங்களில் இனி காய்கறி விற்பனைக் கடைகள் செயல்படும். கொரோனா தொற்று நோயால் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.