தாராபுரம், செப். 18 - தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்ததால் பள்ளி மாணவர் கள் அச்சத்துடன் பாலத்தை கடக்கின்றனர். தாராபுரம் வளையக்கார வீதியில் நக ராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப் பள்ளிக்கு அருகில் ராஜவாய்க்கால் செல் கிறது. ராஜவாய்க்காலைக் கடப்பதற்கு ஒரு பாலம் உள்ளது. இந்நிலையில் குடிமரா மத்து பணிக்காக தாராபுரம் பழைய அம ராவதி பாசன விவசாயிகள் சங்கம் சார் பில் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட போது ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பை களை அகற்றியபோது பாலத்தின் தடுப்புச் சுவர் சேதமடைந்தது. அமராவதி அணையிலிருந்து பாசனத் திற்குத் தண்ணீர் திறந்துவிடும்போது, மேலும் வாய்க்காலில் குப்பைகளை அகற்றி விட்டு பாலத்தை சீர்செய்வதாக பொதுப் பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் இப்பகுதியை கடக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாலத் தில் இருந்து வாய்க்காலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை உட னடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.