tamilnadu

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

 திருப்பூர், ஏப்.15-திருப்பூர் மாவட்டத்தில்விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும், சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய உணவு கழக (தென் மண்டல பிரிவு) சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், தடகளம் (இருபாலர்) ஆகிய விளையாட்டுகளில் திறமை மிக்க, 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், 18 முதல் 24 வயது வரை உள்ள கிராமப்புற, நகர்ப்புறத்தினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்து முழுவிபரம், றறற.கஉi.படிஎ.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே.3ஆம் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;