திருப்பூர், ஆக. 5 - கொடிவேரி - கலிங்கியம் - குன்னத்தூர் கூட்டு குடிநீர் திட் டத்தை முறைப்படுத்தி குன்னத்தூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக குன்னத்தூர் கிளை மார்க்சிஸ்ட் கட்சி செய லாளர் ச.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் என்ற அளவில் குடிநீர் வரவேண்டும். ஆனால் சுமார் நான்கு லட் சம் லிட்டர் அளவே தினமும் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் வரும் பாதையான கொளப்பலூர், கெட்டிச்செவியூர் வரை முறைகேடாக தண்ணீர் உறிஞ்சி பல பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குன்னத்தூர் வர வேண்டிய நீரின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் கார ணமாக குன்னத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அரசி யல் செல்வாக்கு உள்ள நபர்களின் தலையீடு உள்ளதால் குடி நீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த முறைகேடு களை களைந்து குன்னத்தூர் மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க ஆவண செய்யுமாறு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ச.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.