tamilnadu

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

அவிநாசி அக். 27- அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில் அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி செவ்வாயன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், வடுகபாளையம் ஊராட்சி முழுவ தும் பழுதடைந்த சாலைகள், தெரு விளக்குகள் சீரமைத்திட வேண்டும். குடிநீரை முறையாக விநியோகித்திட வேண் டும். பொதுக் கழிப்பிடத்தை சீரமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்  பழனிச்சாமி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராமசாமி, அய்யம்மாள், தீபா, சுதா,  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.