tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்

தாராபுரம், நவ. 2 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக தாரா புரம் நகர் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தாராபுரம் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டதால், குப்பை களை கொட்டமுடியாமல் பொதுமக்கள் சாலையோரங்களில் கொட்டி வைத்திருந் தனர். குறிப்பாக பீமராயர் மெயின் வீதி, சக்தி நகர், தேவேந்திரர் தெரு, கண்ணன் நகர், ராஜேந்திரா நகர், பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம் கிளை நூலகம் முன் புறம் மற்றும் நகராட்சி பூங்கா அருகில் என நகரின் பல பகுதிகளில் சாலையோரங் களில் குப்பைகள் மலைபோல் கொட்டப் பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் (நவ.1) செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தியின் எதிரொலியாக பீமர் மெயின் வீதி, சக்தி நகர் பகுதியில் குவிந்திருந்த குப் பைகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப் படுத்தியது. இதேபோல், தொடர்ந்து தினந்தோறும் நகர் முழுவதும் குப்பை களை அகற்றவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.