tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திருப்பூர், மே 20-திருப்பூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அமைத்தது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்களன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம; ஊரகம்மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் - 2019 தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் திங்களன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டன. அதற்குரிய விளக்கத்தினை மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இதில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்களும் கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் கிராம ஊராட்சி, ஊராட்சிஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும்மாநகராட்சி மூலமாக நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு மாவட்டநிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பவேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) முருகேசன்உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர்கலந்து கொண்டனர்.