திருப்பூர் மாநகரட்சி, 52 ஆவது வார்டு மன்னாங்காடு பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். குடி நீர், வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றித் தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். மேலும், இப்பிரச்சனை யைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத் தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.