tamilnadu

img

கிராம ஊராட்சிப் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கல்

அவிநாசி, ஆக. 20- அவிநாசி கிராம ஊராட்சிப் பணியாளர்களுக்கு திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 5 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சியில்  களப்பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள் ஆகியோருக்கு திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 5 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றி யக் குழுத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பிர சாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ரோட்டரி சங்கத் தலைவர் ரகுபதி, செயலாளர் நாகராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;