tamilnadu

img

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடுக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.  20 – கொரோனா தொற்றில் உயிரி ழந்த வருவாய்த் துறை அலுவலர்க ளுக்கு உரிய நிவாரணம் உடன டியாக வழங்கவும், குடும்பத்தில் ஒரு வருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரியும் தமிழ் நாடு வருவாய்துறை அலுவலர் சங் கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஆட்சியர் அலுவலக சங்க நிர் வாகி ஆர்.மோகனன் தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பி னர் ப.தங்கவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ச.முருக தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.

இதில், வரு வாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப் பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அலு வலக உதவியாளர், பதிவுரு எழுத் தர், இரவு காவலர், ஓட்டுநர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர் குடும்ப நல நிதியை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை மையப்ப டுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.