tamilnadu

img

காங்கேயம் காரல் மார்க்ஸ் நூலகத்தில் பொங்கல் விழா

திருப்பூர்,  ஜன. 16 - திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள பேராசான் கார்ல் மார்க்ஸ் நூல கத்தில் புதனன்று பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே உள்ள இந்த நூல கத்தில் வாசகர்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, வழிபட்டனர். பின்னர்  நடைபெற்ற நிகழ்ச்சியில், தைத் திரு நாள் குறித்தும், தமிழ் மொழியின் சிறப்புகள்  குறித்தும் அரச்சலூர் புலவர் திருநாவுக் கரசர், நூலக நிர்வாகிகள் ப.கண்ணுசாமி, சண்முகசுந்தரம், ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

;