அவிநாசி, ஜூன் 24 – கொரோனா வைரஸ் தடுப்புக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி உலா வரக்கூடாது. அத்தி யாவசியத் தேவையின்றி வெளியே வாக னங்களோடு வெளியில் வந்தால் வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும்.
அத்தியாவசியப் பொருள் களை வாங்க வெளியில் வருபவர்கள் முகக் கவசம், கையுறை அணிந்தே வெளியே வரவேண்டும். கடைகள் மற்றும் சந்தைக ளில் போதிய தனிமனித இடைவெளி யோடு நின்று பொருள்கள் வாங்கிச் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுக ளின் அருகில் வெளிமாநிலம், வெளிநாடுக ளுக்கு சென்றுவந்தவர்கள் யாராவது இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அவர்களைப் பற்றி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் என அவிநாசி பகுதியில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.