அவிநாசி, செப்.1 - சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய விளை யாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமல் குறுமைய விளையாட்டு போட்டிகளில் விளையாடி மாணவிகள் மாவட்ட அளவில் தகுதி பெற்று உள் ளனர். அவிநாசி வட்டம், சேவூர் - கோபி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உயர்நிலைப்பள்ளியா கவும், அதன் பிறகு தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளி யாக வும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1200 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் பின்புறம் விளையாட்டு மைதானம் அமைத்து பல ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் விளையாடி வந்தனர். இந்த விளையாட்டு மைதானம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும். இதே மைதானத்தில் பல பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற் றுள்ளன. இவ்வாறு செயல்பட்டு வந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லா மல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நபார்டு திட்டத் தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 24 கூடுதல் வகுப்பறை கள், ஆய்வுக்கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அப்போது, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி கல்வி துறையினர் நெடுஞ்சாலைத் துறையினரை அணுகி பள்ளிக்கு பின்புறம் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை (விளையாட்டு மைதானம் ) சேந்த்து பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க அனுமதி கேட்ட னர். நெடுஞ்சாலை துறையினரோ வரும் காலங்களில் சாலை விரிவாக்கப்பணி செய்யும் போது இந்த இடம் எங்களுக்கு தேவைப்படும். அதனால் சுவர் கட்டாமல் தற்காலிகமாக இந்த பகுதியில் மட்டும் கம்பி வேலி அமைத்து கொள்ளுங்கள், தேவைப்படும் போது கம்பி வேலியை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன்படி கம்பி வேலி மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில் கம்பி வேலியை தாண்டி சில சமூகவிரோதிகள் பள்ளியில் படுத்து உறங்குவதும், மது அருந்தும் கூடாரமாகவும் பயன்படுத்தி வந்தனர். அதனால் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை விட்டு விட்டு பள்ளிக்கு சொந்தமான இடத்தைச் சுற்றி 2015ஆம் ஆண்டு சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டது. அதன்பிறகு கால்பந்து போன்ற பெரிய விளையாட்டுகள் விளையாட முடியாத மிக குறுகிய அளவில் தான் விளை யாட்டு மைதானம் இருந்தது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) தனசேகரிடம் கேட்டபோது: தற்போது சிறிய அளவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாண வியர்கள் விளையாடி வருகின்றனர். சென்ற ஆண்டு வரை இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றி வந்தார்கள். சென்ற ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் இடம் மாறுதல் பெற்று இரண்டு உடற் பயிற்சி ஆசிரியர்களும் சென்று விட்டனர். அதனால் ஓராண்டாக பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை. உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலையில் எங் கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு என்னுடன் பட்ட தாரி ஆசிரியர்கள் சிலர் இணைந்து எங்களுக்கு தெரிந்த அள வில் இப்போது உள்ள சிறிய விளையாட்டு மைதா னத்தில் விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து, தற்போது நடைபெற்று வரும் குறுமைய விளையாட்டு போட்டிக ளில், எங்கள் பள்ளியிலிருந்து 25 அணிகளை விளையாடச் செய்துள்ளோம். மேலும் 19 வயதிற்குட்பட்டோர் மகளிர் பிரிவில் கோ-கோ விளையாட்டில் அவிநாசி குறுமைய அள வில் விளையாடி, வெற்றி பெற்று, மாவட்ட அளவில் மாண விகள் விளையாடத் தகுதி பெற்று இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். எனவே 14 வகையான கல்வி பொருட்களை வழங்குகி றோம் என்னும் அரசு, இப்பள்ளிக்கென விளையாட்டு மைதானம் அமைத்து, உடற்பயிற்சி ஆசிரியரை நிய மித்து மாணவ, மாணவியர்களுக்கு உடற்கல்வி வழங்க முன்வருமா! (ந.நி)