tamilnadu

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு

திருப்பூர், ஜூலை 14– திருப்பூர் மாநகராட்சி 12ஆவது வார்டுக்கு உட்பட்ட பகு திகளில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வேலம்பாளையம் முத லாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட சாமுண்டிபுரம் தெற்கு மகா சக்தி நகரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்குப் போது மான அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படும் சூழ் நிலை உள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள 6 வீதிகளி லும் பொதுக்குடிநீர் குழாய் மற்றும் மெர்க்குரி விளக்கு கள் அமைத்துத்தர வேண்டும். சாலை இல்லாத வீதிக ளில் முறையாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும். வீடுகளின் முன்பாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி சுகாதாரத்தைப் பாதுகாக்க முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். வீடுகளில் காலை, மாலை நேரங் களில் குப்பைகள் பெற தினமும் தூய்மை பணியாளர்கள் வரு வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர்.

;