tamilnadu

img

சாலைகளை செப்பனிட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் மனு

திருப்பூர், அக். 12 – திருப்பூரில் பயணிகளை காவு வாங்கும் ஆபத்து மிக்க மரண சாலைகளாக இருக்கும் ஏபிடி சாலை மற்றும் மங்க லம் சாலையைச் செப்பனிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாநக ரச் செயலாளர் பா.ஞானசேகரன் தலைமையில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். இதில் மங்கலம் சாலை ஏபிடி சாலையைத் தோண்டி குழாய் பதித்து இதுவரை தார்ச் சாலைகள் போடா மல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இந்த வழியாக கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சாலையைச் செப்பனிட வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 4 ஆம் தேதி களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகும் இந்த சாலைகள் செப் பனிடப்படவில்லை. மேலும் மங்கலம் சாலை கோழிப் பண்ணை முதல் குளத்துப்புதூர் வரை இதேபோல் சாலைக ளைத் தோண்டிப் போட்டு இதுவரை தார்ச்சாலை போடா மல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். எனவே மேற்படி சாலைகளை உடனடியாகச் செப்பனிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது மனுவைப் பெற்றுக் கொண்டார்.