உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, உழவர் சந்தை, மார்க்கெட், ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்தில் நகர செயலாளர் எஸ்.ஆர். மதுசூதணன் தலைமையில் நகரக்குழு உறுப்பினர்கள் தண்ட
பாணி, சுதா சுப்பிரமணியம், தோழன்ராஜா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.