திருப்பூர், நவ. 1- காங்கயம் அருகே, படியாண்டிபாளை யம் பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் ஆலைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என காங்க யம் வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.திருமூர்த்தி என்பவர் தலைமையில் அப்பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரி டம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட படியாண்டிபாளை யம் பகுதியில் வசித்து வருகிறேன். எங்கள் நிலத்திற்கு அருகே, தனியார் அரிசி ஆலைக் குச் சொந்தமான பாறைக்குழியில் (சர்வே எண்: 55/1, 55/1B, 55/1A1) அரிசி ஆலைக் கழிவுகள் மற்றும் சூடான சாம்பலையும் கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதி யில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரிசி ஆலை உரி மையாளரிடம் பல முறை முறையிட்டும் கேட்காமல், தொடர்ந்து சாம்பல் கழிவு களைக் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திங்களன்று எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் மல்லிகா என்ற பெண் தெரியாமல் நெருப்புடன் கூடிய சாம்பல் கழிவுகளில் கால் வைத்ததால், கால் வெந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். மேற்கண்ட பாறைக்குழி யில் முறைகேடாக, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, கனிம வளத்தை விற் றுள்ளனர். இந்த முறைகேட்டினை மூடி மறைக்கவே பாறைக்குழியில் அரிசி ஆலைக் கழிவுகளையும், நெருப்புடன் கூடிய சாம்பலையும் கொட்டி வைத்து, சுகா தாரச் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்ற னர். எனவே, இந்தப் பாறைக்குழியில் ஆலைக் கழிவுகளைக் கொட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.