அவிநாசி, அக்.6- மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி திங்களன்று அவிநாசியில் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையிலும், துணைத்தலைவர் பிரசாந்த் முன்னிலை யிலும் திங்களன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி பேசுகையில், கணியம்பூண்டி பகுதியில் தார் சாலை அமைத்து தர வேண்டும். வஞ்சிபாளையம் பள்ளியிலிருந்து திருப்பூர் காலேஜ் ரோடு செல்லும் சாலை வரை சாக்கடை வசதி ஏற்ப டுத்திட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பறிக்கும் வேளாண் திருத்தச் சட் டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இத்தீர்மானத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் ஆத ரித்து பேசினார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வழிமொழிந்த தீர்மானம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்தா லோசிக்கப்படும் என ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார்.