திருப்பூர், செப். 26- திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையின் நிர் வாக சீர்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி யினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் மின் தடையால் ஆக்சிஜன் இன்றி உயிரி ழந்தவர்களின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வா கம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே காரணம். ஆகவே, சம்மந்தப்பட்ட மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற னர். அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத் ததால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.