அவிநாசி, மார்ச் 23- அவிநாசி அரசு மருத்துவமனையில் ஞாயிறன்று ஊர டங்கு காரணமாக புறநோயாளிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அவிநாசியில் சேவூர் செல்லும் சாலையில் அரசு மருத்து வமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனைக்கு 31 ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளி களாகவும் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்பட்டது. இதன்காரணமாக அவிநாசி அரசு மருத்துவ மனை புறநோயாளிகள் பிரிவு ரசீது பெறுமிடம் நடமாட்டம் இன்றியும் காணப்பட்டது.