tamilnadu

கூட்டுறவு சங்கத் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

அவிநாசி, ஜூன் 18- அவிநாசி அருகே வஞ்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருப்பூர் சரக கூட்டுறவு சங்கங்களில் துணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 11 இயக்குனர்கள் வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிவ சாமி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நி லையில், சிவசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதத்திலேயே  கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்றதுடன், அத்தொகைக்கான மாதத் தவணையும் கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த திருப்பூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காந்திமணி, கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிவசாமியை தகுதி இழப்பு நடவ டிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் வஞ்சிபாளையம் வேளாண் கூட்டுறவு கடன் சங்க இயக்கு னர்கள் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலா ளர் சுமதியிடம் கேட்டபோது, சிவசாமி ரூ. 5 லட்சம் கடனை, துணைப்பதிவாளரின் கடிதம் கிடைக்கப் பெற்ற வுடன் திரும்ப செலுத்திவிட்டார் என்றும், ஆதலால் தற் போது வரை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதும் எடுக்கப் படவில்லை எனவும் தெரிவித்தார்.

;