அவிநாசி, பிப். 5- பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் ஒரு வர் உயிரிழந்தார். பெங்களூரிலிருந்து மாதுளம் பழங்களை ஏற்றிக் கொண்டு, கோவையை நோக்கி சரக்கு வேன் ஒன்று அவிநாசி வழியாகச் செவ்வாயன்று சென்ற கொண்டி ருந்தது. பெருமாநல்லூரை அடுத்த புது திருப்பூர் அருகே அந்த வேன் எதிர்பாராத விதமாக முன் னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த, சரக்கு வேன் ஓட்டுநரான பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (21) உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.