திருப்பூர், நவ. 14 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தையல் கூட்டுறவு சங்கங்களில் தையல் கலை ஞர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியு) பேரவை வலியு றுத்தி உள்ளது. பல்லடம் சிஐடியு அலு வலகத்தில் வியாழனன்று மாவட்ட அளவிலான தையல் கலைஞர்கள் சிறப்புப் பேரவை சங்கத் தின் மாவட்டத்தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தையல் கலைஞர்கள் மாநில சம்மேளன தலைவர் சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று சங்கத் தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஒய்.அன்பு, தையல் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் ஆர்.பரமசிவம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதில் தையல் கலைஞர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். தேசியமய வங்கிகளில் தையலர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேரவை யில் பெண் தையல் கலைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.