tamilnadu

கள்ள நோட்டுகளுடன் வட மாநில இளைஞர் கைது

திருப்பூர், செப். 29- திருப்பூர் மாவட்டம்,  தென்னம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மனோஜ் செல்போன் கடை வைத்துள் ளார். ஆன்லைன் மூலம் பணபரிமாற்றமும் செய்து  வந்தார். அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் தனது தந்தையின் வங்கி கணக்குக்கு ரூ.14 ஆயிரம் அனுப்ப வேண்டும் என போலி ரூ.2 ஆயிரம் நோட்டு கள் கொடுத்து உள்ளார். அவர் கொடுத்தது கள்ள நோட் டுகள் என்பதையறிந்த மனோஜ், காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் வட மாநில இளைஞர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் செய்யப்பட்டவை என தெரிய வந்தது.  இதையடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.