உடுமலை, மார்ச் 2- உடுமலை அருகே வீடுகளில் புகுந்து மர்மநபர் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். உடுமலை, ஏரிப்பாளையம் லட்சுமி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவர் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில் நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனின் தாயார் ஜோதி லட்சுமியை (70) கல்லால் கொடூரமாகத் தாக்கி உள்ளார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மணி கண்டனின் மனைவி கலைவாணி வெளியே வந்த போது அவரையும் கல்லால் தாக்கியதாகக் கூறப்படு கிறது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அங்கிருந்து மர்மநபர் தப்பியோடி விட்டார். இதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த கலைவாணியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதேபோல் அதே பகுதியில் வசித்துவரும் கட்டிடத்தொழிலாளி ராமு என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி ஜெயலட்சுமி என்பவரை யும் அந்நபவர் கல்லால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இவரும் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலையாளியை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் பெண்களை குறி வைத்து தாக்கி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.