திருப்பூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மாபெரும் இயக்கம் நடத்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பெருந்திரளான தொழிலாளர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளியன்று பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரடிவாவி, புளியம்பட்டி, காமநாயக்கன்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் நூறு நாள் வேலை பணித்தளங்களில் தொழிலாளர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.